அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் விழா தொடக்கம்!

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் விழா தொடக்கம்!

அவிநாசி கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை விநாயகர் பூஜையுடன் தொடங்கப்பட்டது.
Published on

அவிநாசி கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை விநாயகர் பூஜையுடன் தொடங்கப்பட்டது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் நாயனார் தேவார பதிகம் பாடி உயிருடன் மீண்டும் உயிர்ப்பித்து எழச் செய்த திருத்தலமாகவும் பிரசித்தி பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் விளங்குகிறது. இக்கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை காலை பிள்ளையார் வழிபாடு, வேள்வி உள்ளிட்டவை நடைபெற்றது. 

29ஆம் தேதி திங்கள்கிழமை காலை முதல் கால வேள்வி தொடங்கி பிப்ரவரி 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை எட்டு கால வேள்வி பூஜை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வாக பிப்ரவரி 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு சுவாமி திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com