சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி

வழக்குகளை விசாரித்து விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் தெரிவித்தார்.

News image
ஓய்வுபெற்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல்
Updated On :25 ஜனவரி 2024, 6:32 am

DIN

சென்னை: வழக்குகளை விசாரித்து விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்படும் கல்விச் சிந்தனை அரங்கு இன்று(ஜன.25) இரண்டாவது நாளாக நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கின் இரண்டாம் நாளில் “சட்டத்தை தெரிந்து கொள்ள வேண்டியது ஏன்?” என்ற தலைப்பில் உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் பங்கேற்று பேசினார்.

அவர் பேசியது, “சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட பொதுநல வழக்குப் பிரிவை, அரசியல் பிரச்னைகளுக்காக பயன்படுத்தப்படக்கூடாது.

வழக்குகளை விரைவாக முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும். அரசுத் தரப்பு வழக்குகளை குறைக்க வேண்டும். முடிக்கப்பட்ட வழக்குகள் மீண்டும் நீதிமன்றத்துக்கு வரும் பட்சத்தில் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.

நீதிமன்றத்தில் உத்தரவுகளை அரசு அமல்படுத்த வேண்டும். அதனை அமல்படுத்த எங்களுக்கு பின்னால் காவல்துறையோ, ராணுவமோ இல்லை.

கொலீஜியத்தில் ஆலோசனை நடத்தி நீதிபதிகளை நியமிப்பதற்கு பதிலாக நேருக்கு நேர் விவாதித்து நியமனங்களை செய்ய வேண்டும்.” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.