தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

பண்டைய காலம் முதலே கல்வியின் மையமாகத் திகழும் தமிழகம்: தர்மேந்திர பிரதான்

பண்டைய காலம் முதலே கல்வியின் மையமாக தமிழ்நாடு திகழ்வதாக மத்திய கல்வித் துறை  அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

News image

தர்மேந்திர பிரதான்

Updated On :25 ஜனவரி 2024, 10:44 am IST

சென்னை: பண்டைய காலம் முதலே கல்வியின் மையமாக தமிழ்நாடு திகழ்வதாக மத்திய கல்வித் துறை  அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்படும் கல்விச் சிந்தனை அரங்கு இன்று(ஜன.25) இரண்டாவது நாளாக நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கின் இரண்டாம் நாளில் காணொலி வாயிலாக பங்கேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது பேசிய அமைச்சர், “பண்டைய காலம்முதல் கல்வியின் மையமாகத் திகழும் தமிழ்நாட்டில் இந்த கல்விச் சிந்தனை அரங்கு நடைபெறுவதில் மகிழ்ச்சி.

பனராஸில் காசி தமிழ்ச் சங்க தொடக்க விழாவின்போது, உலகிலேயே மிகப் பழமையான மொழியாக தமிழ் இருப்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தேசிய கல்விக் கொள்கை 2020-ல் அனைத்து இந்திய மொழிகளும் ஊக்குவிக்கப்படுகிறது. உயர்கல்வி பாடப் புத்தகங்கள் தாய் மொழிகளில் இருப்பதை உறுதி செய்கிறது.
” என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.