கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே லோயர்கேம்ப்பில் பவதாரணி உடல்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு இசையமைப்பாளர் இளையராஜா வந்துள்ளார்.
பவதாரணிக்கு மக்களும், திரையுலகப் பிரமுகர்களும், உறவினர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
தேனிமாவட்டம் கம்பம் அருகே லோயர்கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாறு கரையில் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரணி உடல் அடக்கம் நடைபெற உள்ளது.
முன்னதாக சனிக்கிழமை அங்குள்ள ஸ்ரீ குருகிருபா வேதபாடசாலையில் சனிக்கிழமை காலை சுமார் 11 மணியளவில் சென்னையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பவதாரணி உடல் கொண்டுவரப்பட்டு வேதபாடசாலை அரங்கில் வைக்கப்பட்டது.
இதையும் படிக்க.. பவதாரணியின் மறைவையொட்டி... புற்றுநோய்: வலியும் வாழ்வும்
உடலுக்கு சுமார் 2 மணியளவில் இளையராஜா வந்து மகளது உடலைப் பார்த்து கண்கலங்கினார். அவரை தொடர்ந்து திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அஞ்சலி செலுத்தி கண்கலங்கினார். பிறகு இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர் பிரேம்ஜி, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, டிரம்ஸ் மணி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இறுதிச் சடங்கு
இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமம், லோயா்கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரையில் குருவனூத்து பாலம் அருகே இளையராஜா கட்டியுள்ள குருகிருபா வேதபாடசாலை ஆசிரமத்துக்கு பவதாரணியின் உடல் கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அங்கு இளையராஜா மற்றும் உறவினர்கள் வந்துள்ளனர். இறுதி சடங்குகள் சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது.
பின்னா், பவதாரணியின் உடல் அவரது தாய் ஜீவாவின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்படுகிறது. ஏற்கெனவே இளையராஜாவின் தாய் சின்னத்தாயின் சமாதியும் இங்குள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் முதல் பாடல்!

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 291 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க உத்வேகம் அளித்த சத்யராஜ்... விஜய் நேர்காணல் -4!

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



