நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தொகுதிப் பங்கீடு: பிப்.3-ல் திமுகவுடன் இந்திய கம்யூ. பேச்சுவார்த்தை

மக்களவைத் தோ்தலையொட்டி திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தை சென்னையில் பிப்.3ஆம் தேதி நடைபெறுகிறது. 

News image
Updated On :29 ஜனவரி 2024, 7:51 am

DIN

மக்களவைத் தோ்தலையொட்டி திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தை சென்னையில் பிப்.3ஆம் தேதி நடைபெறுகிறது. 

மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. இவ்விரு கட்சிகளும் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் கட்ட பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டன. 

இந்தப் பேச்சுவாா்த்தை சுமுகமாக இருந்ததாக திமுகவும், திருப்தியாக இருந்ததாக காங்கிரஸும் தெரிவித்தன. அதேவேளையில் காங்கிரஸ் தரப்பில் திமுகவிடம் தமிழகம், புதுச்சேரியை சோ்த்து 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் காங்கிரஸைத் தொடர்ந்து திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தை பிப்.3ஆம் தேதி நடைபெறுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, மாநில துணைச் செயலர் மு.வீரபாண்டியன் பேச்சுவார்ததையில் பங்கேற்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.