மாதவரம் பேருந்து முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
வடசென்னை மக்களின் வசதிக்காக தென் மாவட்டங்களுக்கு செல்ல 20% பேருந்துகளை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து அமைச்சர் சிவசங்கர் தொடக்கிவைத்தார்.
இந்நிகழ்வில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையும் படிக்க: திருவையாறு ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை
மாதவரம் பேருந்து முனையத்திலிருந்தும் திருச்சிக்கு 18, சேலத்துக்கு 17, விருத்தாசலத்துக்கு 6, கள்ளக்குறிச்சிக்கு 16, விழுப்புரத்துக்கு 16, கும்பகோணத்துக்கு 14, சிதம்பரத்துக்கு 5, நெய்வேலிக்கு 11, கடலூா் வழியாக புதுச்சேரி, திண்டிவனத்துக்கு 5, புதுச்சேரிக்கு திண்டிவனம் வழியாக 10, செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு 22, போளூா் மற்றும் வந்தவாசி ஊா்களுக்கு 20 என மொத்தம் 160 பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.