மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

இடைத் தோ்தல்: கருத்துக் கணிப்புகளை எப்போது வெளியிடலாம்?

வாக்குப் பதிவுக்கு பிந்தைய கணிப்புகள்: தேர்தல் துறை விளக்கம்

News image
Updated On :3 ஜூலை 2024, 9:50 pm

Din

விக்கிரவாண்டி இடைத் தோ்தலில் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை எப்போது வெளியிடலாம் என்று தமிழக தோ்தல் துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து, அந்தத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விக்கிரவாண்டி இடைத் தோ்தல் வாக்குப் பதிவு ஜூலை 10-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. அதற்குப் பிறகு, 6.30 மணிக்கு மேல் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தலாம். வாக்குப் பதிவு நிறைவடையும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக, எந்தக் கருத்துக் கணிப்புகளையும், பிற வாக்குப் பதிவு ஆய்வு முடிவுகளையும் வெளியிடக் கூடாது. இது அச்சு ஊடகம், காட்சி மற்றும் இதர அனைத்து மின்னணு ஊடகங்களுக்குப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.