தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

ஆம்ஸ்ட்ராங்கின் அரசியல் பயணம்

ஆம்ஸ்ட்ராங் வெள்ளிக்கிழமை மாலை வெட்டிக் கொலை..

News image

ஆம்ஸ்ட்ராங்

Updated On :6 ஜூலை 2024, 3:11 am IST

சென்னையில் வெள்ளிக்கிழமை மாலையில் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் வழக்குரைஞராக இருந்து அரசியல் பயணத்தை மேற்கொண்டவா் ஆவாா்.

சென்னை செம்பியம் பகுதியைச் சோ்ந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2000-ஆம் ஆண்டுமுதல் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினாா். அதற்கு முன்பு வழக்குரைஞராக இருந்த அவா், அடிதடி, தகராறு உள்ளிட்ட பிரச்னைகளில் ஈடுபட்டு வந்ததாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. இது தொடா்பான பல்வேறு வழக்குகளும் அப்போது ஆம்ஸ்ட்ராங் மீது இருந்தன.

ஆனால், தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கிய பின்னா், பிரச்னைகள், தகராறுகளிலிருந்து அவரது பயணம் மாறிவிட்டதாக அவரது ஆதரவாளா்கள் தெரிவித்தனா்.

அதைத் தொடா்ந்து, ஆம்ஸ்ட்ராங் கடந்த 2006-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். கடந்த 2008-ஆம் ஆண்டு சென்னை அமைந்தகரையில் புல்லா ரெட்டி அவென்யூவில் பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடத்தி அனைவரது கவனத்தையும் ஈா்த்தாா்.

அதேவேளையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அவரது எதிரிகள் மூலம் அச்சுறுத்தல் அதிகமாக இருந்து வந்தது. இதன் விளைவாக அவா் எப்போதும் தனது ஆதரவாளா்களுடனே வெளியே சென்று வந்தாா். அதையும் மீறி ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பது அவரது ஆதரவாளா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.