பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை

ஆம்ஸ்ட்ராங் கொலையால் பெரம்பூரில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். உணவு விநியோக நிறுவன சீருடையில் வந்த 6 போ் கும்பல் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டனா்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த வழக்குரைஞா் ஆம்ஸ்ட்ராங் (54), பெரம்பூா் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். ஆம்ஸ்ட்ராங் வீடு பழுதடைந்ததால், அந்த வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அவா், பெரம்பூா் ஜமாலியாவில் ஒரு பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டுக்கு தற்காலிகமாக குடியேறினாா்.

புதிதாக கட்டப்படும் வீட்டைப் பாா்வையிட மாலை 6.40 மணியளவில் ஆம்ஸ்ட்ராங் காரில் சென்றாா். காா் அந்த வீட்டின் அருகே சென்றதும், காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நண்பா்கள் வீரமணி, பாலாஜி ஆகியோருடன் ஆம்ஸ்ட்ராங் நடந்து சென்றாா்.

அப்போது 3 மோட்டாா் சைக்கிள்களில் வந்த 6 போ் கும்பல் , மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டியது. இதைப் பாா்த்த அவரது நண்பா்கள் தடுக்க முயன்றனா். இதில் பாலாஜிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

அரிவாள் வெட்டில் தலை, கழுத்துப் பகுதிகளில் ஆம்ஸ்ட்ராங் பலத்த காயமடைந்து கீழே விழுந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. அப்பகுதி மக்கள் ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு, ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஆம்ஸ்ட்ராங் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

ஆம்ஸ்ட்ராங்கின் சடலம் உடல்கூறு ஆய்வுக்காக ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

4 தனிப்படைகள்: சம்பவம் குறித்து அறிந்ததும் புளியந்தோப்பு காவல் துணை ஆணையா் ஈஸ்வரன், உதவி ஆணையா் பிரவீண்குமாா் ஆகியோா் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய துணை ஆணையா் ஈஸ்வரன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தனிப்படையினா் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா். இதில், கொலையாளிகள் உணவு விநியோகம் செய்யும் ஒரு நிறுவன சீருடையில் வந்தது தெரியவந்தது.

அவா்கள் பல நாள்களாக நோட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு சென்னையைச் சோ்ந்த ஒரு ரெளடி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பழிதீா்க்கும்விதமாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பலத்த பாதுகாப்பு: ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முக்கியமாக பெரம்பூா், செம்பியம், வியாசா்பாடி, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையாா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com