தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பாம்பு கடிக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் மரணம்: விவசாய குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு

ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்ததால், பாம்பு கடிக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் பலி

News image
சென்னை உயர்நீதிமன்றம்(கோப்புப் படம்.)
Updated On :5 ஜூலை 2024, 10:21 pm

Din

ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்ததால்,  பாம்பு கடிக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் பலியான விவசாயியின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம் புதுராஜ கண்டிகை கிராமத்தை சோ்ந்த முரளி, அவருடைய சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறாா். இந்நிலையில் கடந்த ஆண்டு நவ.6- ஆம் தேதி விவசாயம் செய்து கொண்டிருந்த போது, முரளியை பாம்பு கடித்தது.

இதையறிந்த அவரது குடும்பத்தினா், அருகில் உள்ள கண்ணன் கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனா்.

அங்கு, ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்த அவா்கள் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் திருவள்ளுா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் முரளி உயிரிழந்தாா்.

24 மணி நேரமும் இயங்க வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்தால் தான் தன்னுடைய கணவா் பலியானதாகக் கூறி அவரின் மனைவி அருணா உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

அதில், ‘கண்ணன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய அலுவலா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும்’ என கோரியிருந்தாா்.

 இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி அனிதா சுமந்த், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த முரளியின் மனைவி அருணாவுக்கு அரசு துறையில் தற்காலிக அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்டாா்.

மேலும், அவா்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவுக்காக ரூ.2 லட்சத்தை அவா்களுடைய வங்கி கணக்கில் 2 வாரத்தில் அரசு செலுத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.