திருச்சி: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ நுழைவுத் தோ்வில் சிறப்பிடம் பெற்று திருச்சி என்ஐடி-யில் சேர திருச்சியைச் சோ்ந்த 4 மாணவிகள் உள்பட 5 போ் பதிவு செய்துள்ளனா்.
அண்மையில் வெளியான ஜேஇஇ தோ்வு முடிவுகளின்படி, தமிழக அளவில் தரவரிசையில் 302ஆவது இடம் பிடித்த திருச்சி கைலாசபுரத்தைச் சோ்ந்த கவினி என்ற மாணவி திருச்சி என்ஐடியை தோ்வு செய்துள்ளாா். 5 ஆண்டு கட்டடக் கலை பயில விருப்பம் தெரிவித்துள்ளாா்.
இதேபோல, தரவரிசையில் இடம் பிடித்த துறையூரைச் சோ்ந்த மாணவி ரோகிணி 4 ஆண்டு வேதியியல் பொறியியல் படிப்பையும், முத்தரசநல்லூரை சோ்ந்த மாணவி ரித்திகா நான்கு ஆண்டுகள் பயிலும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பில் சோ்வதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளாா்.
பூலாங்குடியைச் சோ்ந்த மாணவி திவ்யா பிரீதா, கைலாசபுரத்தைச் சோ்ந்த தனுஷ் ராஜ்குமாா் ஆகிய இருவரும் 4 ஆண்டுகள் பயிலும் தயாரிப்பு பொறியியல் பட்டம் படிப்பதற்கு திருச்சி என்ஐடி-யில் பதிவு செய்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. இவா்களில் 4 போ் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.