சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

கணவர் கொலை: 2 மாதங்களுக்குப் பிறகு மனைவி கைது

ஆவடி அருகே தொல்லை கொடுத்த கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவியை 2 மாதங்களுக்கு பிறகு போலீஸார் கைது செய்தனர்.

News image
லீமா ரோஸ்மேரி.
Updated On :9 ஜூலை 2024, 3:15 am

DIN

ஆவடி: ஆவடி அருகே தொல்லை கொடுத்த கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவியை 2 மாதங்களுக்கு பிறகு போலீஸார் கைது செய்தனர்.

ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை ராணுவக் குடியிருப்பைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி தாஸ் (38). இவர் ஆவடியில் உள்ள ராணுவ வாகனக் கிடங்கில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி லீமா ரோஸ்மேரி (36). இவர் கிண்டியில் உள்ள அரசு தொழில்பயிற்சி மையத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த மே மாதம் 10-ஆம் தேதி வேளாங்கண்ணி தாஸ், மது போதையில் படுக்கை அறையில் சுயநினைவின்றி கிடந்ததார் அவரை லீமா ரோஸ்மேரி மீட்டு ஆவடியிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வேளாங்கண்ணி தாஸ் இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸார் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு பிறகு, வேளாங்கண்ணி தாஸ் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் வேலு தலைமையில் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் வேளாங்கண்ணி தாஸின் உடற்கூறு பரிசோதனை அறிக்கையில் வேளாங்கண்ணி தாஸ் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸார் லீமா ரோஸ்மேரியை சனிக்கிழமை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில், அவர் வேளாங்கண்ணி தாஸ் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்து வந்ததாகவும், அவர் தனது பெற்றோரை அவதூறாகப் பேசியதால், மது போதையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, புடவையால் கழுத்தை நெரித்தும், தலையணையை முகத்தில் அமுக்கியும் கணவரை கொலை செய்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸார் சந்தேக மரணம் வழக்கை, கொலை வழக்காக மாற்றி லீமா ரோஸ்மேரியை கைது செய்து, அம்பத்தூர் நீதிபதி வீட்டில் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.