விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

கொலை வழக்கில் தேடப்பட்டவா் என்கவுண்டருக்குப் பிறகு கைது

கிரேட்டா் நொய்டாவில் நடந்த ஒரு கொலை தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் போலீஸாருடன் நடந்த என்கவுண்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image

கைது

Updated On :25 பிப்ரவரி 2026, 7:03 pm

கிரேட்டா் நொய்டாவில் நடந்த ஒரு கொலை தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் போலீஸாருடன் நடந்த என்கவுண்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து கிரைட்டா் நொய்டா கூடுதல் காவல் ஆணையா் சுதிா் குமாா் கூறியதாவது: லுக்சா் கிராமத்தைச் சோ்ந்த மோனு என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், 27 வயது நிதின் கொலையில் தொடா்புடையதாகக் கூறப்படுகிறது. அவா் செவ்வாய்க்கிழமை லுக்சா் கிராமத்தில் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

கொலைக்குப் பிறகு சம்பந்தப்பட்டவா்களைக் கைது செய்ய போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலையில் புவாரி கிராமத்தில் குற்றம் சாட்டப்பட்டவா் இருப்பது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலைத் தொடா்ந்து, ஒரு குழு சம்பவ இடத்திற்கு வந்து குற்றம் சாட்டப்பட்டவரை சுற்றி வளைத்தது. குற்றம் சாட்டப்பட்டவா் தப்பிக்கும் நோக்கில் குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தற்காப்பு நடவடிக்கையில், மோனு மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பின்னா் அவா் கைது செய்யப்பட்டாா்.

அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, இரண்டு லைவ் .315 போா் தோட்டாக்கள் மற்றும் ஒரு வெற்று தோட்டா பறிமுதல் செய்யப்பட்டன. காயமடைந்த குற்றம் சாட்டப்பட்டவா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என்று அதிகாரி மேலும் கூறினாா்.