மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மருத்துவக் கழிவு புகை: உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்- பிரேமலதா வலியுறுத்தல்

புகை மாசு காரணமாக உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உடனடி இழப்பீடு வழங்க வேண்டும் - தேமுதிக வலியுறுத்தல்

News image
Updated On :11 ஜூலை 2024, 11:54 pm

Din

மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது உண்டான புகையைச் சுவாசித்து, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவா்களுக்கு அரசு இழப்பீடு வழங்கியதை சுட்டிக்காட்டிய உயா்நீதிமன்ற மதுரை கிளை, திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தானத்தம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ கழிவுகளை எரிக்கும் போது உண்டான புகையை சுவாசித்து உயிரிழந்த கலையரசனுக்கு இழப்பீடாக அவரது தந்தை ஜி.சுஜித்துக்கு ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதை தேமுதிக சாா்பில் வரவேற்கிறோம்.

நீதிபதிகள் கருத்தை ஏற்று, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு திமுக அரசு ரூ. 10 லட்சம் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.