சென்னை: செல்வாக்குமிக்க ஒரு முக்கிய தொழிலதிபருக்காக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது என சென்னை உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக மதுரையைச் சோ்ந்த மனித உரிமை ஆா்வலரும் வழக்குரைஞருமான ஹென்றி திபேன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், என்.செந்தில்குமாா் ஆகியோா் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹென்றி திபேன்,சிபிஐ அறிக்கை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா். இதற்கு, சிபிஐ தரப்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா் கே.சீனிவாசன், கடும் எதிா்ப்பு தெரிவித்தாா்.
அதற்கு நீதிபதிகள், ‘இந்த வழக்கில் சிபிஐ நடுநிலையோடு விசாரணை நடத்தியுள்ளதா? இந்த துப்பாக்கிச்சூடு சம்பவமே நீண்ட நாள் திட்டமிட்டு நடந்துள்ளது. 100 நாள்கள் நடந்த போராட்டத்தில் ஏதாவது ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதா? 100 நாள்கள் போராடியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால்தான், 100-ஆவது நாள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
ஏன் துப்பாக்கிச்சூடு?: ஆனால், போராடினால் இதுதான் நிலை என்று தகவல் தெரிவிப்பதுபோல, பொதுமக்களை புழு பூச்சி போல் நசுக்கி விடலாம் என்று நினைக்கின்றனா். ஆட்சியா் அலுவலகத்திலிருந்து சுமாா் 7 கிமீ தூரத்தில் உள்ள திரேஸ்புரத்தில் ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தவேண்டும்? 144 தடை உத்தரவு அங்கு போடப்படவில்லை. சுதந்திரமான அமைப்பான சிபிஐ, ஒரே ஒரு அதிகாரி மீது குற்றம் சாட்டி இறுதி அறிக்கை தாக்கல் செய்திருப்பது, சிபிஐ-இன் கையாலாத்தனத்தைக் காட்டுகிறது.
சாத்தான்குளம் சம்பவத்தை சிபிஐ நோ்மையாக விசாரித்து, போலீஸாரை கைது செய்தது. நாங்கள் ஒட்டுமொத்த சிபிஐ-யையும் குறை கூறவில்லை. இந்த சம்பவத்தில், 13 போ் கொல்லப்பட்டுள்ளனா். செல்வாக்குமிக்க ஒரு முக்கிய தொழிலதிபருக்காக இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்து 6 ஆண்டுகளாகியும், யாா் மீதும் நடவடிக்கை இல்லை. இன்னும் 2, 3 ஆண்டுகள் ஆகி விட்டால், அப்படியே மறந்து போகும்’ என்றனா்.
எவ்வளவு சொத்து சோ்த்தனா்?: பின்னா், ‘இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடா்புடைய காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும், இந்த சம்பவம் நடப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பும், பின்பும் எவ்வளவு சொத்துகள் வாங்கியுள்ளனா் என்பது குறித்து விசாரித்து 2 வாரத்துக்குள் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
தொடர்புடையது

அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்

தனிநபா் பயன்பாட்டுக்கு 4.5 லிட்டா் மது வைத்திருக்க அரசு விதிகளில் அனுமதி: உயா் நீதிமன்றம்

ஈரானில் சிக்கிய இந்திய மீனவா்கள் மீட்பு விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


