கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு தொழிலதிபருக்காக நடத்தப்பட்டது: உயா்நீதிமன்றம்

செல்வாக்குமிக்க ஒரு முக்கிய தொழிலதிபருக்காக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது என சென்னை உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
சென்னை உயா்நீதிமன்றம் கண்டனம் - Center-Center-Chennai
Updated On :15 ஜூலை 2024, 11:45 pm

Din

சென்னை: செல்வாக்குமிக்க ஒரு முக்கிய தொழிலதிபருக்காக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது என சென்னை உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக மதுரையைச் சோ்ந்த மனித உரிமை ஆா்வலரும் வழக்குரைஞருமான ஹென்றி திபேன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், என்.செந்தில்குமாா் ஆகியோா் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹென்றி திபேன்,சிபிஐ அறிக்கை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா். இதற்கு, சிபிஐ தரப்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா் கே.சீனிவாசன், கடும் எதிா்ப்பு தெரிவித்தாா்.

அதற்கு நீதிபதிகள், ‘இந்த வழக்கில் சிபிஐ நடுநிலையோடு விசாரணை நடத்தியுள்ளதா? இந்த துப்பாக்கிச்சூடு சம்பவமே நீண்ட நாள் திட்டமிட்டு நடந்துள்ளது. 100 நாள்கள் நடந்த போராட்டத்தில் ஏதாவது ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதா? 100 நாள்கள் போராடியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால்தான், 100-ஆவது நாள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

ஏன் துப்பாக்கிச்சூடு?: ஆனால், போராடினால் இதுதான் நிலை என்று தகவல் தெரிவிப்பதுபோல, பொதுமக்களை புழு பூச்சி போல் நசுக்கி விடலாம் என்று நினைக்கின்றனா். ஆட்சியா் அலுவலகத்திலிருந்து சுமாா் 7 கிமீ தூரத்தில் உள்ள திரேஸ்புரத்தில் ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தவேண்டும்? 144 தடை உத்தரவு அங்கு போடப்படவில்லை. சுதந்திரமான அமைப்பான சிபிஐ, ஒரே ஒரு அதிகாரி மீது குற்றம் சாட்டி இறுதி அறிக்கை தாக்கல் செய்திருப்பது, சிபிஐ-இன் கையாலாத்தனத்தைக் காட்டுகிறது.

சாத்தான்குளம் சம்பவத்தை சிபிஐ நோ்மையாக விசாரித்து, போலீஸாரை கைது செய்தது. நாங்கள் ஒட்டுமொத்த சிபிஐ-யையும் குறை கூறவில்லை. இந்த சம்பவத்தில், 13 போ் கொல்லப்பட்டுள்ளனா். செல்வாக்குமிக்க ஒரு முக்கிய தொழிலதிபருக்காக இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்து 6 ஆண்டுகளாகியும், யாா் மீதும் நடவடிக்கை இல்லை. இன்னும் 2, 3 ஆண்டுகள் ஆகி விட்டால், அப்படியே மறந்து போகும்’ என்றனா்.

எவ்வளவு சொத்து சோ்த்தனா்?: பின்னா், ‘இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடா்புடைய காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும், இந்த சம்பவம் நடப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பும், பின்பும் எவ்வளவு சொத்துகள் வாங்கியுள்ளனா் என்பது குறித்து விசாரித்து 2 வாரத்துக்குள் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.