சென்னை: ரயிலில் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஏற்கெனவே பாஜக நிர்வாகிகள் கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர் மற்றும் நயினார் நாகேந்திரனின் ஓட்டுநர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், முதல்முறையாக நயினார் நாகேந்திரனிடம் விசாரணை நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்தபோது, சென்னை தாம்பரத்தில் கடந்த ஏப். 6-ஆம் தேதி வந்த நெல்லை விரைவு ரயிலில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டபோது, திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனுக்கு சொந்தமான உணவக ஊழியா்களிடம் உரிய ஆவணங்களின்றி இருந்த 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு நயினாா் நாகேந்திரன், தமிழக பாஜக அமைப்புச் செயலா் கேசவ விநாயகம் உள்ளிட்ட 5 பேருக்கு சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியது.
கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர் ஏற்கெனவே ஆஜராகி பதிலளித்துள்ள நிலையில், நயினார் நாகேந்திரன் இன்று முதல்முறையாக ஆஜராகியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நயினாா் நாகேந்திரன் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடி
முதல்வரின் தொடர் போராட்டங்கள் தேர்தலில் தோல்வியடையும்: நயினார் நாகேந்திரன்
தொகுதி மாறிய நயினார் நாகேந்திரன்: சவால் அளிக்கும் திமுக! - சாத்தூர் தொகுதி அலசல்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்: நயினாா் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உயா்நீதிமன்றத்தில் திமுக மனு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


