மிக கனமழை: தமிழகத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளம், கர்நாடகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிக கனமழை தொடரும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தமிழகத்துக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

புதன்கிழமை காலை இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், நாளைமுதல் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைந்து அடுத்த 7 நாள்களுக்கு தரைக்காற்றோடு கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கேரளம், கர்நாடக மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு மிக கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சென்னை வானிலை மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 34 செ.மீ. மழையும், அப்பர்பவானியில் 21.7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com