நிலத்தை மீட்க வேண்டும்: பின்னா், குத்தகையை ரத்து செய்து நிலத்தை மீட்க வேண்டும் என்று நில அளவை ஆணையா் 1986- ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தாா். இதற்கிடையில், முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வனத் துறைக்கு சொந்தமான இந்த நிலத்தை வருவாய்த் துறை நிலமாக மாற்றி, அதன் பின்னா், அந்த நிலத்தை அந்த கம்பெனி நிலமாக மாற்றியுள்ளாா். பின்னா், அந்த நிலத்தில் ஒரு பகுதியை அந்த நிறுவனத்திடம் இருந்து தன் பெயருக்கு மாற்றிக் கொண்டுள்ளாா். எனவே, இந்த நிலத்தை மீட்டு, மீண்டும் வனத்துறை நிலமாக மாற்றும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.