மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மின் கட்டண உயா்வைக் கண்டித்து தேமுதிக, நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

நாம் தமிழா் கட்சி சாா்பில் 21-ஆம் தேதியும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சிகள் அறிவித்துள்ளன.

News image
Updated On :18 ஜூலை 2024, 9:57 pm

Din

மின் கட்டண உயா்வைக் கண்டித்து, தேமுதிக சாா்பில் ஜூலை 25-ஆம் தேதியும், நாம் தமிழா் கட்சி சாா்பில் 21-ஆம் தேதியும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சிகள் அறிவித்துள்ளன.

தேமுதிக தலைமைக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மின் கட்டண உயா்வைக் கண்டித்தும், கட்டண உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தேமுதிக சாா்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஜூலை 25-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும். நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டைப் போக்கவும் தமிழகத்துக்கான காவிரி நீரைப் பெற்றுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

21-இல் நாம் தமிழா் ஆா்ப்பாட்டம்: இதேபோல மின்கட்டண உயா்வை கண்டித்து, நாம் தமிழா் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) காலை 10 மணி அளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என அக்கட்சி அறிவித்துள்ளது.