நிலமோசடி வழக்கு: கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எம்.ஆர். விஜயபாஸ்கர்

நிலமோசடி வழக்கு விசாரணைக்காக கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் எம்.ஆர். விஜயபாஸ்கர்
கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எம்.ஆர். விஜயபாஸ்கர்
கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எம்.ஆர். விஜயபாஸ்கர்
Published on
Updated on
1 min read

கேரளத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நிலமோசடி வழக்குப் புகாரின் பேரில் கேரளத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

கேரளத்தில் தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், சிபிசிஐடி போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீது கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் இருக்கும் எம்.ஆர். விஜயபாஸ்கரை இன்று கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2-ல் நீதிபதி (பொறுப்பு) மகேஷ் முன்னிலையில் வெள்ளிக்கிழமை காலை 11.50 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com