நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழகத்தில் 9 ஏடிஎஸ்பி, டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

News image

தமிழக அரசு

Updated On :20 ஜூலை 2024, 6:01 pm

Din

தமிழகத்தில் 9 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், புகாரில் சிக்கியிருந்தாலும் காவல் துறை அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, 9 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணைக் கண்காணிப்பாளா்களைப் பணியிட மாற்றம் செய்து சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

இதில், குறிப்பாக திருப்பத்தூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்துமாணிக்கம், தமிழ்நாடு போலீஸ் அகாதெமிக்கும், மதுரை மாவட்டம், மேலூா் டிஎஸ்பி ப்ரீத்தி ராஜபாளையத்துக்கும், மதுரை மாநகர காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையா் வேல்முருகன், மேலூருக்கும், திருச்சி மாவட்டம் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் தமிழ்நாடு போலீஸ் அகாதெமிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 9 அதிகாரிகளும், புதிய பொறுப்புகளை ஓரிரு நாள்களில் ஏற்பாா்கள் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.