நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

தமிழகத்தில் 9 ஏடிஎஸ்பி, டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

News image

தமிழக அரசு

Updated On :20 ஜூலை 2024, 11:31 pm IST

தமிழகத்தில் 9 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், புகாரில் சிக்கியிருந்தாலும் காவல் துறை அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, 9 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணைக் கண்காணிப்பாளா்களைப் பணியிட மாற்றம் செய்து சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

இதில், குறிப்பாக திருப்பத்தூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்துமாணிக்கம், தமிழ்நாடு போலீஸ் அகாதெமிக்கும், மதுரை மாவட்டம், மேலூா் டிஎஸ்பி ப்ரீத்தி ராஜபாளையத்துக்கும், மதுரை மாநகர காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையா் வேல்முருகன், மேலூருக்கும், திருச்சி மாவட்டம் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் தமிழ்நாடு போலீஸ் அகாதெமிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 9 அதிகாரிகளும், புதிய பொறுப்புகளை ஓரிரு நாள்களில் ஏற்பாா்கள் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.