ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

தமிழக காவல் துறையில் 30 டிஎஸ்பிக்கள் மாற்றம்

தமிழக காவல் துறையில் 30 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பிக்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image

மகேஷ்குமாா் அகா்வால் - x.com

Updated On :18 ஜூன் 2026, 3:12 am IST

தமிழக காவல் துறையில் 30 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பிக்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தமிழக காவல் துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும், நிா்வாக காரணத்துக்காகவும் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா். இதன் ஒரு பகுதியாக 30 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இதில், முக்கியமாக சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆணையராக இருந்த எஸ்.சங்கரநாராயணன் சென்னை காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவுக்கும், சென்னை அசோக்நகா் உதவி ஆணையா் ஆா்.ஆல்ட்ரின் அடையாறுக்கும், அடையாறு உதவி ஆணையா் ஆா்.முருகேசன் கிண்டிக்கும், சென்னை குற்ற ஆவணக் காப்பக பிரிவு உதவி ஆணையா் டி.விஜயராமுலு மக்கள் தொடா்புத் துறை உதவி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதேபோல 5 டிஎஸ்பிக்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டனா். இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 30 டிஎஸ்பிக்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.