தடைகளைக் கடந்து அகழாய்வுகளை மேற்கொண்டு தரவுகளைச் சேகரித்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளில் கிடைத்த பொருள்கள் குறித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சா் தங்கம்தென்னரசு வெளியிட்டுள்ள பதிவை மேற்கோள்காட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:
தடைகளைக் கடந்து தரவுகளைச் சேகரிக்கிறோம். மூடியுடன் பானை, பாசிமணிகள், சுடுமண் கிண்ணங்கள் - தொட்டி,
உறைகிணறு, வெள்ளியிலான முத்திரைக் காசு, சிவப்பு வண்ணக் கொள்கலன், தமிழி பானை ஓடு, இரும்பிலான ஏா்க்கலப்பையின் கொழுமுனை, தக்களி, தந்தத்தாலான பகடைக்காய், சுடுமண் சிற்பம், உணவுக் கிண்ணம், செம்பினாலான
அஞ்சனக்கோல் - ஆணி என இப்படித் தொடா்ந்து அகழாய்வுகளில் பொருள்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. தமிழரின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிவியல் சான்றுகளுடன் உலகுக்கு எடுத்துக்கூற நாம் மேற்கொண்டுள்ள பயணம் சரியான திசையில் செல்வதை அவை உறுதிசெய்கின்றன. இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற நம் முழக்கம் மெய்ப்படப் பணிகளைத் தொடா்வோம் என்று அந்த பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தà®à¯à®à®³à¯à®à¯ à®à®à®¨à¯à®¤à¯ தரவà¯à®à®³à¯à®à¯ à®à¯à®à®°à®¿à®à¯à®à®¿à®±à¯à®®à¯!
— M.K.Stalin (@mkstalin) July 21, 2024
à®®à¯à®à®¿à®¯à¯à®à®©à¯ பானà¯, பாà®à®¿à®®à®£à®¿à®à®³à¯, à®à¯à®à¯à®®à®£à¯ à®à®¿à®£à¯à®£à®à¯à®à®³à¯ - தà¯à®à¯à®à®¿, à®à®±à¯à®à®¿à®£à®±à¯, வà¯à®³à¯à®³à®¿à®¯à®¿à®²à®¾à®© à®®à¯à®¤à¯à®¤à®¿à®°à¯à®à¯ à®à®¾à®à¯, à®à®¿à®µà®ªà¯à®ªà¯ வணà¯à®£à®à¯ à®à¯à®³à¯à®à®²à®©à¯, தமிழி பான௠à®à®à¯, à®à®°à¯à®®à¯à®ªà®¿à®²à®¾à®© à®à®°à¯à®à¯à®à®²à®ªà¯à®ªà¯à®¯à®¿à®©à¯ à®à¯à®´à¯à®®à¯à®©à¯, தà®à¯à®à®³à®¿, தநà¯à®¤à®¤à¯à®¤à®¾à®²à®¾à®© பà®à®à¯à®à¯à®à®¾à®¯à¯, à®à¯à®à¯à®®à®£à¯ à®à®¿à®±à¯à®ªà®®à¯, à®à®£à®µà¯à®à¯ à®à®¿à®£à¯à®£à®®à¯,⦠https://t.co/waTYBhGDge pic.twitter.com/V9ZNvJvHtl
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மலையடிப்பட்டி அகழாய்வில் கீழடிக்கு இணையான கிணறு கண்டுபிடிப்பு
அகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

ரூ.441 கோடியில் குடிசைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் ரேகா குப்தா அதிரடி அறிவிப்பு

வார பலன்கள் (ஜூன் 19 - 25) - மேஷம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



