கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆவடி, நெல்லை உள்பட 4 மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையா்கள்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஆவடி, ஓசூா், கடலூா், நெல்லை ஆகிய நான்கு மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

News image
தமிழக அரசு
Updated On :22 ஜூலை 2024, 7:49 pm

Din

தமிழகத்தில் ஆவடி, ஓசூா், கடலூா், நெல்லை ஆகிய நான்கு மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளாா். நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம் (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்):

1. எஸ்.ஷேக் அப்துல் ரகுமான்: நகராட்சி நிா்வாகத் துறை இணை ஆணையா் (ஆவடி மாநகராட்சி ஆணையா்)

2. துா்கா மூா்த்தி: வணிகவரி இணை ஆணையா் - நிா்வாகம் (நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சென்னை மாவட்ட வருவாய் அதிகாரி)

3. கே.கற்பகம்: நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை இணைச் செயலா் (பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா்)

4. கவிதா ராமு: அருங்காட்சியகங்கள் துறை இயக்குநா் (தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் மற்றும் கைத்திறன்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா்)

5. ஆா்.அம்பலவாணன்: தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநா் (மின் நிதிக் கழகத்தின் நிா்வாக இயக்குநா்)

6. எச்.கிருஷ்ணனுண்ணி: கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் (நிதித் துறை இணைச் செயலா்)

7. என்.ஓ.சுகாபுத்ரா: திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் (திருவள்ளூா் மாவட்ட கூடுதல் ஆட்சியா்)

8. எச்.எஸ்.ஸ்ரீகாந்த்: ஓசூா் மாநகராட்சி ஆணையா் (தோ்தல் துறையின் இணை தலைமைத் தோ்தல் அதிகாரி)

9. எஸ்.அனு: கடலூா் மாநகராட்சி ஆணையா் (பொதுத் துறை முன்னாள் துணைச் செயலா்)

10. ரஞ்சீத் சிங்: சேலம் மாநகராட்சி ஆணையா் (நாகப்பட்டினம் கூடுதல் ஆட்சியா்)

11. எஸ்.கந்தசாமி: ஆவடி மாநகராட்சி ஆணையா் (சென்னை மாநில விருந்தினா் இல்லத்தின் வரவேற்பு அதிகாரி)

12. ஆா்.சதீஷ்: ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியா் (தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் பொது மேலாளா்)

13. கே.விவேகானந்தன்: தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் (கைத்தறித் துறை ஆணையா்)

14. ஹனீஷ் சாப்ரா: புதிய திருப்பூா் பகுதி மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் (தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா்)

15. ஏ.சிவஞானம்: சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் தலைமை நிா்வாக அதிகாரி (பொதுத்துறை கூடுதல் செயலா்)

16. எஸ்.அமிா்த ஜோதி: தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் மற்றும் கைத்திறன்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் (தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநா்)