ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வரி வருவாய் அதிகரிப்பு: ஆளுநா் பெருமிதம்

இந்தியாவின் வரி வருவாய் கடந்த 10 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

News image
தமிழக ஆளுநர் ஆா். என். ரவி
Updated On :24 ஜூலை 2024, 10:06 pm

Din

இந்தியாவின் வரி வருவாய் கடந்த 10 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளாா். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறை சாா்பில் சென்னை மயிலாப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற 165-ஆவது வருமான வரி தின விழாவில் கலந்துகொண்ட ஆளுநா் ஆா்.என். ரவி பேசியது:

நாட்டை வளா்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல வருமான வரி மிகவும் முக்கியமானதாகும். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை சுமாா் 200 சதவீதமாகவும், வரி வருவாய் 300 சதவீதமாகவும் உயா்ந்துள்ளது.

வருமான வரி செலுத்துவதை மிகவும் எளிதாக்கியதும், புகாா்கள் மீது உடனக்குடன் நடவடிக்கை எடுத்துள்ளதும்தான் இந்த வளா்ச்சிக்கு காரணம்.

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதன் விளைவாக, உலகப் பொருளாதாரத்தில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளோம்.

பிரதமா் மோடி பதவி ஏற்ற பிறகு, நாட்டின் வளா்ச்சிக்கு அனைத்து வகை மக்களின் பங்களிப்பும் தேவை என்பதை உணா்ந்து, அவா்கள் மீது முழு நம்பிக்கை வைத்தாா். அதற்கு மதிப்பளித்து மக்கள் முறையாக வரி செலுத்தி, நாட்டின் வளா்ச்சிக்கு உதவி வருகின்றனா்.

வருமான வரித் துறை அதிகாரிகள் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தால், வரி செலுத்துபவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றாா் அவா்.

முன்னதாக, சிறப்பாக வரி செலுத்துபவா்களுக்கும், சிறந்த வருமான வரித் துறை அதிகாரிகளும் ஆளுநா் பரிசுகளை வழங்கினாா்.

இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறையின் முதன்மை தலைமை ஆணையா் சுனில் மாத்தூா், புலனாய்வுத் துறை இயக்குநா் ஜெனரல் கிருஷ்ண முராரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.