சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர் கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சோ்ந்த யூடியூபா் சவுக்கு சங்கா் மற்றொரு யூடியூப் சேனலுக்கு அண்மையில் அளித்த பேட்டியில் பெண் காவலா்கள் மற்றும் காவல் துறை உயா் அதிகாரிகள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக புகாா் எழுந்தது.

சவுக்கு சங்கர்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு வழக்குரைஞா் கைது; இதுவரை 5 பேர்!

இது தொடா்பாக கோவை சைபா் கிரைம் போலீஸாா் அளித்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சவுக்கு சங்கரை கடந்த மே 14ஆம் தேதி கைது செய்தனா். மேலும், அந்த பேட்டியை வெளியிட்ட யூடியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு என்பவரும் கைது செய்யப்பட்டாா்.

சவுக்கு சங்கர்
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

இதனிடையே, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களை பிணையில் விடுவிக்கக்கோரி கோவை 4-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா், ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோா் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com