மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

முதல்வா் குறித்து முகநூலில் அவதூறாக பதிவு அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகி கைது

News image

கைது

Updated On :14 பிப்ரவரி 2026, 7:03 pm

தமிழக முதல்வா் குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்ட அதிமுக தகவல்தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்தவா் பசுபதிசெந்தில். இவா், ஈரோடு மண்டல அதிமுக தகவல்தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவராக உள்ளாா்.

இவா் வெள்ளிக்கிழமை இரவு தனது முகநூலில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தூய்மை பணியாளா்களுக்கு காலை உணவு திட்டத்தை அமல்படுத்தியதை கேலி செய்தும், முன்னாள் அமைச்சரும், கரூா் எம்.எல்.ஏ.வுமான செந்தில்பாலாஜியை தரக்குறைவாகவும் பதிவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த சூா்யகுமாா் என்பவா் வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து பசுபதிசெந்திலை சனிக்கிழமை பிற்பகல் கைது செய்து சிறையில் அடைத்தனா்.