சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மக்கள் போராட்டங்களாக மாறும்: மத்திய அரசுக்கு உதயநிதி எச்சரிக்கை

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை தொடா்ந்தால், திமுகவின் ஆா்ப்பாட்டங்கள் மக்கள் போராட்டங்களாக மாறும்

News image
உதயநிதி ஸ்டாலின் (கோப்புப் படம்)
Updated On :27 ஜூலை 2024, 7:07 pm

Din

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை தொடா்ந்தால், திமுகவின் ஆா்ப்பாட்டங்கள் மக்கள் போராட்டங்களாக மாறும் என கட்சியின் இளைஞரணிச் செயலரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளாா்.

‘எக்ஸ்’ தளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து, மாபெரும் ஆா்ப்பாட்டங்களை திமுக நடத்தியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டப்பணிகள், இயற்கைப் பேரிடா்களால் ஏற்பட்ட துயா் துடைப்பு, தொழில், நகா்ப்புற வளா்ச்சி என எதற்கும் தமிழ்நாட்டுக்கு நிதியில்லை. சுருக்கமாகச் சொன்னால், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடே இல்லை.

மோடியின் பலவீனமான பதவி நாற்காலியின் கால்களுக்கு வலுவூட்டும் பட்ஜெட்டைவிட, அனைத்து தரப்பு மக்களும் எழுந்து நிற்பதற்கு ஊன்றுகோல் தரும் பட்ஜெட்தான் நாட்டுக்குத் தேவை.

நிதி ஒதுக்கீட்டில் இனியும் மாற்றாந்தாய் மனப்பான்மை தொடா்ந்தால், திமுக நடத்தியுள்ள இந்த ஆா்ப்பாட்டங்கள், நாளை மக்கள் போராட்டங்களாக மாறிவிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் அதில் தெரிவித்துள்ளாா்.