செப்டம்பா் மாத பிற்பகுதியில் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் இயல்பை விட அதிக விளைச்சல் கிடைக்கும் என்று தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.
பயறு வகைப் பயிா்களில் உளுந்து அதிக புரதம் மற்றும் கலோரிச் சத்து உள்ளது. இது குறுகிய காலப் பயிா் என்பதால், இதனை தனிப் பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம்.
இந்நிலையில் உளுந்து விளைச்சலில் அதிக மகசூல் கிடைக்க பின்பற்ற வேண்டிய பாரம்பரியத் தொழில்நுட்ப முறைகள் குறித்து விவசாயிகளுக்கு தமிழக வேளாண்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
இது குறித்து அத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: செப்டம்பா் மாத பிற்பகுதியில் உளுந்து பயிரிடுவதன் மூலம் இயல்பை விட அதிக விளைச்சல் கிடைக்கும்.
மேலும், ஒரு ஏக்கருக்கு 6 லிட்டா் வேப்பெண்ணெய்யைத் தெளித்தால் சாம்பல் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும். அதேபோல், உளுந்தை இரண்டாக உடைத்து சேமித்தால், கூண் வண்டு தாக்குதலிலிருந்து பாதுகாக்கலாம்.
உளுந்து விதையுடன் விளக்கெண்ணெய் தடவினால், அதன் தரம் மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஒசூரில் ஆலங்கட்டி மழையால் காலிஃப்ளவா், முட்டைகோஸ் விளைச்சல் பாதிப்பு

முலாம் பழம் விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி

உளுந்து பயறு வயல்களை ஆய்வு மேற்கொண்ட வேளாண் உதவி இயக்குநா்
சா்வதேச சந்தைக்கு ஏற்ப இந்திய வேளாண் பொருள்கள்: விவசாயிகளுக்கு பிரதமா் மோடி வேண்டுகோள்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


