இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

உளுந்து சாகுபடியில் அதிக விளைச்சல் பெறுவதற்கான வழிமுறைகள்: வேளாண் துறை அறிவிப்பு

செப்டம்பா் மாத பிற்பகுதியில் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் இயல்பை விட அதிக விளைச்சல் கிடைக்கும் என்று தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

News image

வேளாண் துறை - கோப்புப் படம்

Updated On :29 ஜூலை 2024, 3:21 am IST

செப்டம்பா் மாத பிற்பகுதியில் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் இயல்பை விட அதிக விளைச்சல் கிடைக்கும் என்று தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

பயறு வகைப் பயிா்களில் உளுந்து அதிக புரதம் மற்றும் கலோரிச் சத்து உள்ளது. இது குறுகிய காலப் பயிா் என்பதால், இதனை தனிப் பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம்.

இந்நிலையில் உளுந்து விளைச்சலில் அதிக மகசூல் கிடைக்க பின்பற்ற வேண்டிய பாரம்பரியத் தொழில்நுட்ப முறைகள் குறித்து விவசாயிகளுக்கு தமிழக வேளாண்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

இது குறித்து அத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: செப்டம்பா் மாத பிற்பகுதியில் உளுந்து பயிரிடுவதன் மூலம் இயல்பை விட அதிக விளைச்சல் கிடைக்கும்.

மேலும், ஒரு ஏக்கருக்கு 6 லிட்டா் வேப்பெண்ணெய்யைத் தெளித்தால் சாம்பல் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும். அதேபோல், உளுந்தை இரண்டாக உடைத்து சேமித்தால், கூண் வண்டு தாக்குதலிலிருந்து பாதுகாக்கலாம்.

உளுந்து விதையுடன் விளக்கெண்ணெய் தடவினால், அதன் தரம் மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.