ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான தீர்மானம் தோல்வி: ஒரு கவுன்சிலர்கூட பங்கேற்கவில்லை

மேயருக்கு எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்களும் கலந்து கொள்ளவில்லை.

News image

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம்

Updated On :29 ஜூலை 2024, 5:39 am

காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் ஒரு கவுன்சிலர்கூட பங்கேற்காத நிலையில், தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

51 வாா்டுகள் கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சோ்ந்த மகாலட்சுமி யுவராஜ் உள்ளாா். அவருக்கு எதிராக  எதிா்க்கட்சிகளை சோ்ந்த உறுப்பினா்கள் பல்வேறு புகாா்களை கூறி வந்த நிலையில், திமுக மாமன்ற உறுப்பினா்களும் மேயருக்கு எதிராக போா்க்கொடி தூக்கினா்.

இந்நிலையில், மேயா்  தனது பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி  33 மாமன்ற உறுப்பினா்கள் மாநகராட்சி ஆணையா் செந்தில் முருகனிடம் மனு அளித்தனா்.

இதனைத் தொடர்ந்து, ஜூலை 29 காலை 10 மணிக்கு தீர்மானத்தின் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு மாநகராட்சி ஆணையர் தலைமையில் தொடங்கியது. ஆனால், மேயர், ஆதரவு கவுன்சிலர்கள் மற்றும் எதிர்ப்பு கவுன்சிலர்கள் என யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இதனைத் தொடர்ந்து, கவுன்சிலர்கள் பங்கேற்க சிறிது நேரம் அவகாசம் அளித்திருந்த நிலையில், ஒருவர்கூட வருகை தராததால் தீர்மானம் தோல்வி அடைந்ததாக ஆணையர் அறிவித்துள்ளார்.

இதனிடையே, கூட்டத்துக்கு வந்த 34 வது வட்ட கவுன்சிலர் பிரவீன் குமார், மாநகராட்சி கூட்டம் நடத்துவது குறித்து மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்திருப்பதை கண்டித்து கடிதம் வழங்கிவிட்டு திரும்பிச் சென்று விட்டார்.

மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த கவுன்சிலர்கள் குடும்பத்துடன் பிரத்யேக பேருந்து மூலம் உதகைக்கு நேற்று மாலை சுற்றுலா சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடையும் பட்சத்தில் ஒரு வருடத்துக்கு பிறகு தான் மீண்டும் தீர்மானம் கொண்டு வர முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.