சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஓபிஎஸ்ஸுக்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை: கே.பி.முனுசாமி

”ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையோடு கைகோர்த்தவர் ஓபிஎஸ்.”

News image
அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர் சந்திப்பு
Updated On :6 ஜூன் 2024, 7:38 am

DIN

கிருஷ்ணகிரி: அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைவோம் என்று சொல்வதற்கு ஓ.பன்னீர்செல்வதிற்கு எந்த ஒரு தார்மிக உரிமையும் இல்லை என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது :

அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்தபோது அதற்கு முக்கிய கருவியாக இருந்து அதிமுகவிற்கு மேலும் மேலும் சோதனைகளை கொடுத்தவர் ஓ பன்னீர்செல்வம். அதிமுக தொண்டர்கள் கோயிலாக வணங்கும் அதிமுக தலைமை கழக அலுவலகத்தை குண்டர்கள் உதவியோடு சூறையாடிச் சென்றவர் ஓ பன்னீர்செல்வம். அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையோடு கைகோர்த்துக்கொண்டு தன் சுயநலத்திற்காக அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர் தான் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக கட்சி முடக்க முயற்சித்த ஓ பன்னீர்செல்வத்திற்கு அனைவரும் ஒன்றிணைவோம் என அழைப்பு விடுப்பதற்கு எந்த ஒரு அருகதையும் இல்லை.

சசிகலா அழைப்பு விடுத்து 24 மணி நேரம் கடந்தும் யாராவது சென்று இருக்கிறார்களா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தற்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக 2019 ஆம் ஆண்டு தேர்தலை காட்டிலும் கூடுதலாக 2 சதவீதம் பெற்றுள்ளது. ஆனால், திமுக 6 சதவிகிதம் வாக்கை இழந்துள்ளது .

2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி பெற்று எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்கும்” என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.