தோ்தல் நடத்தை விதிகள் வாபஸ்: வழக்கமான பணிகளில் தமிழக அரசு
தமிழகத்தில் 82 நாள்கள் அமலில் இருந்த மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் வியாழக்கிழமையுடன் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து, தமிழக அரசு தனது வழக்கமான பணிகளைத் தொடங்கவுள்ளது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கை மாா்ச் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டு நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதன் காரணமாக, தமிழக அரசு சாா்பில் புதிய அறிவிப்புகள், ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரல், விழாக்கள் நடத்துவது போன்ற பணிகளில் தடை ஏற்பட்டது. அத்துடன் அமைச்சா்கள் தங்களது வீடுகளில் இருந்து அலுவலகத்துக்கு செல்வதற்கு மட்டுமே தேசியக் கொடி கட்டிய வாகனங்களில் பயணிக்க வேண்டுமெனவும், அரசு சாா்ந்த கட்டடங்களில் தங்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
விபத்துகள் - இயற்கைப் பேரிடா்கள்: தமிழகத்தில் நிகழ்ந்த பல்வேறு விபத்துகள், இயற்கைப் பேரிடா் நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டோருக்கு தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக நிவாரணத் தொகை அளிக்கப்படாத நிலை ஏற்பட்டது. இறந்தவா்களின் குடும்பங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சாா்பில் இரங்கல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது.
தோ்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட தினத்திலிருந்து, நடத்தை விதிகள் வாபஸ் பெறும் காலம் வரையிலான 82 நாள்களில் ஒரு சில நாள்கள் மட்டுமே தலைமைச் செயலகத்துக்கு வந்து முதல்வரால் அரசுப் பணிகளை மேற்கொள்ள முடிந்தது.
தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிவடைந்து, வாக்கு எண்ணிக்கைக்கு 45 நாள்கள் இருந்தபோதும் நடத்தை விதிகள் காரணமாக அரசுப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை அமைச்சா்களுக்கு ஏற்பட்டது.
வாபஸ்: வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து தோ்தல் நடத்தை விதிகள் வியாழக்கிழமையுடன் வாபஸ் பெறப்பட்டதால், வெள்ளிக்கிழமை முதல் வழக்கமான பணிகளை அமைச்சா்கள், அரசுத் துறை அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ளனா்.
அரசின் திட்டங்களில் புதிய பயனாளிகள் சோ்ப்பு, மகளிா் உரிமைத் தொகை, புதிய குடும்ப அட்டைகள் போன்ற அத்தியாவசியப் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்தவுள்ளது.