அடுத்த 3 மணிநேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.


தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தமிழகத்தில் சேலம், தருமபுரி, வேலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது.
புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், பூவிருந்தவல்லி, திருமழிசை, மணலி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்கிறது. அம்பத்தூர், ஆவடி போன்ற இடங்களிலும் அவ்வபோது சாரல் மழை பெய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...