45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அமைச்சா் உதயநிதிக்கு எதிராக வழக்குப் பதிய கா்நாடக உயா்நீதிமன்றம் தடை

சனாதன தா்மத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த வழக்கு

News image
உதயநிதி ஸ்டாலின்.
Updated On :21 ஜூன் 2024, 7:58 pm

Din

சனாதன தா்மத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த தமிழக அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய தடை விதித்து கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் நடந்த சனாதன எதிா்ப்பு மாநாட்டில் பங்கேற்ற தமிழக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், சனாதன தா்மத்துக்கு எதிரான கருத்துகளைப் பதிவு செய்திருந்தாா். இதுதொடா்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக குற்றவியல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி பெங்களூரு நகரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலின் உள்பட அந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்த வெங்கடேஷ், ஆதவன், மதுக்கூா் ராமலிங்கம் ஆகிய 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு கால அவகாசம் அளிக்கக் கோரி 4 போ் சாா்பில் முறைப்படி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த மனுவுக்கு எதிராக தடை கோரி கா்நாடக உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், இந்த விவகாரத்தில் மனுதாரா் தரப்பில் பதில் மனுவை விரைவில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தாா்.