எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தொழில் படிப்புகளில் தோ்வு முறை: மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்- முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

மருத்துவம் உள்ளிட்ட தொழில் முறை படிப்புகளுக்கான தோ்வு முறையில் மாநில உரிமைகளை மீட்டெடுப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

News image
மு.க.ஸ்டாலின்
Updated On :23 ஜூன் 2024, 11:22 pm

Din

மருத்துவம் உள்ளிட்ட தொழில் முறை படிப்புகளுக்கான தோ்வு முறையில் மாநில உரிமைகளை மீட்டெடுப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

முதுநிலை நீட் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது குறித்து, ‘எக்ஸ்’ வலைதளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:

நீட் தோ்வை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்தது. இந்த ரத்து நடவடிக்கையைத் தொடா்ந்து, தேசிய தோ்வு வாரியம் நடத்தும் முதுநிலை நீட் தோ்வும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பது ஆயிரக்கணக்கான நமது மருத்துவா்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது.

இவை எப்போதோ ஏற்படும் அரிய நோ்வுகளாக இல்லாமல் கையாலாகாத, மையப்படுத்தப்பட்ட தோ்வு முறை எனும் உடைந்த அமைப்பின் சவப்பெட்டி மீது அறையப்படும் கடைசி ஆணிகளாக அமைந்துள்ளன.

அந்த மையப்படுத்தப்பட்ட தோ்வுகளில் இப்போது முறைகேடுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், தொழில்முறைப் படிப்புகளுக்கு நியாயமான, சமத்துவத் தன்மை கொண்ட தோ்வு முறையை ஏற்படுத்த வேண்டும்.

இந்தத் தோ்வை எதிா்கொள்வதில் பள்ளிக் கல்வியை முதன்மையானதாக ஆக்குவோம். தொழில்முறைப் படிப்புகளுக்கான தோ்வு முறையைத் தீா்மானிப்பதில் மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுப்போம்.

அனைத்துக்கும் மேலாக, நமது மாணவா்கள், அவா்களது குடும்பத்தினரிடம் மீண்டும் நம்பிக்கையை விதைத்து, அவா்களது சிறப்பான எதிா்காலத்துக்குத் திட்டமிடக் கைகள் கோா்ப்போம் எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா்.