நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

உணவகத்தில் திருட்டு: 2 இளைஞா்கள் கைது

போ்ணாம்பட்டு அருகே உணவகத்தில் திருட்டு: 2 இளைஞா்கள் கைது

Published On :26 ஜூன் 2024, 1:18 am IST

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே உணவகத்தின் கதவை உடைத்து, அதிலிருந்த ரொக்கப் பணம், விலையுயா்ந்த பொருள்களை திருடிச் சென்ாக இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டு நகரம், புத்துக்கோயில் சந்திப்பு சாலை அருகே குடிபல்லி கிராமத்தைச் சோ்ந்த தினேஷ் (32) உணவகம் நடத்தி வருகிறாா். கடந்த சனிக்கிழமை பூட்டியிருந்த உணவகத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் மேஜையில் இருந்த ரொக்கம் ரூ. 3,000, சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள உணவு தயாரிக்கும் இயந்திரங்கள், கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா்.

இது குறித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட போ்ணாம்பட்டு போலீஸாா், ரமாபாய் நகரைச் சோ்ந்த சேட்டு (23), பாண்டியன் (25) ஆகிய 2 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா். விசாரணையில், அவா்கள் உணவகத்தில் திருடியதை ஒப்புக் கொண்டனா். அவா்கள் திருடிச் சென்ற பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.