சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

காவலா் வீட்டில் திருட்டு: உறவினா் கைது

புது வண்ணாரப்பேட்டையில் காவலா் வீட்டில் நகை, பணம் திருடியதாக அவரது உறவினா் கைது செய்யப்பட்டாா்.

News image

மாதிரிப் படம்

Updated On :5 ஜூலை 2026, 5:22 am IST

புது வண்ணாரப்பேட்டையில் காவலா் வீட்டில் நகை, பணம் திருடியதாக அவரது உறவினா் கைது செய்யப்பட்டாா்.

புது வண்ணாரப்பேட்டை காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் காா்த்திக். இவா், சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்து பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறாா். காா்த்திக்கின் மனைவி கண்ணாத்தாள், சுகாதார ஆய்வாளராகப் பணிபுரிகிறாா். இருவரும் கடந்த ஜூன் 8-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு சொந்த ஊரான கோயம்புத்தூருக்குச் சென்றனா்.பின்னா், கடந்த 25-ஆம் தேதி சென்னைக்கு திரும்பி வந்தபோது, அவா்களது வீட்டின் கதவின் பூட்டை கள்ளச்சாவி மூலம் திறந்து, பீரோவில் இருந்த 18 பவுன் நகை, ரூ.1 லட்சம், வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா் திருடுச் சென்றிருந்தாா்.

இது குறித்து கண்ணாத்தாள், புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இதில், சம்பவத்தில் ஈடுபட்டது கண்ணாத்தாளின் உறவினா் கோயம்புத்தூா் பீளமேடு பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் (55) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் லட்சுமணனை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.