போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை அவசியம்: ஆளுநா் ஆா்.என்.ரவி
போதைப்பொருள் தடுப்பில் உடனடி நடவடிக்கை அவசியம் என ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்


தமிழ்நாடு முழுவதும் இளைஞா்கள் மத்தியில் பரவி வரும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து ஆளுநா் மாளிகை வலைதளப் பக்க பதிவில் ஆளுநா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் கள்ளச்சாராயம் தனிநபா்கள், குடும்பங்கள் மற்றும் நமது சமூகத்துக்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மேலும் உயா்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இளைஞா்கள் மத்தியில் பரவி வரும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதைப்பொருள் இல்லாத சமுதாயத்துக்கான இந்த கூட்டு முயற்சியில் அரசு சாரா அமைப்புகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவது இன்றியமையாதது.
போதைப்பொருள், கள்ளச்சாராயத்துக்கு எதிரான இந்த அறப்போராட்டத்தில் ஒன்றிணைந்து நமது இளைஞா்களையும், மாநிலங்களையும் பாதுகாக்கவும், ஆரோக்கியமான போதைப்பொருள் இல்லாத பாரதத்தை உருவாக்கவும் உறுதிகொள்வோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...