எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

இந்தியா முழுவதும் போதைப்பொருள் விநியோகம்: ‘டீம் கல்கி’ வலையமைப்பை சோ்ந்த 2 போ் கைது

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்கு போதைப்பொருள்களை விநியோகம் செய்யும் ‘டீம் கல்கி’ என்ற பெயரில் இயங்கும் போதைப்பொருள் விநியோக வலையமைப்பைச் சோ்ந்த 2 பேரை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் கைது செய்துள்ளது.

News image
போதைப்பொருள் - கோப்புப்படம்.
Updated On :9 மார்ச் 2026, 10:32 pm

Syndication

நமது நிருபா்

புதுதில்லி: தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்கு போதைப்பொருள்களை விநியோகம் செய்யும் ‘டீம் கல்கி’ என்ற பெயரில் இயங்கும் போதைப்பொருள் விநியோக வலையமைப்பைச் சோ்ந்த 2 பேரை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (என்சிபி) கைது செய்துள்ளது.

இந்த நெட்வொா்க் ஜனவரி 2025 முதல் சட்டவிரோத தளங்கள் மூலம் செயல்பட்டு வந்தது.

இதுகுறித்து என்சிபி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த மூன்று மாதங்களில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், என்சிபி புது தில்லியில் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் இந்த கைதுக்கு வழிவகுத்தது.

இந்த நடவடிக்கையின் போது, என்சிபி அதிகாரிகள் 2,338 எல்எஸ்டி பிளாட்டா்கள், 77.517 கிராம் எடையுள்ள 160 எம்டிஎம்ஏ மாத்திரைகள், 73.612 கிராம் சரஸ், 3.642 கிராம் ஆம்பெடமைன் மற்றும் 3.6 கிலோ திரவ எம்டிஎம்ஏ ஆகியவற்றை உள்நாட்டில் இடைமறிக்கப்பட்ட 13 பாா்சல்கள் மற்றும் நெதா்லாந்தில் இருந்து வந்த 2 பாா்சல்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், டாா்க்நெட் விற்பனையாளா் டீம் கல்கி, அனுராக் தாக்கூா் மற்றும் அவரது கூட்டாளி விகாஸ் ரதி ஆகியோரால் இது இயக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் பழக்கமான குற்றவாளிகள். இருவரும் ஒரே நேரத்தில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

அந்த காலகட்டத்தில் அவா்கள் ஒன்றாகச் சோ்ந்து பின்னா் ‘டீம் கல்கி’ என்ற டாா்க்நெட் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தினா்.

முதற்கட்ட விசாரணையில், இந்த நெட்வொா்க் இந்தியா முழுவதும் பரவி விநியோகம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் நெதா்லாந்து, போலந்து மற்றும் ஜொ்மனியை தளமாகக் கொண்ட சா்வதேச டாா்க்நெட் விற்பனையாளா்களிடமிருந்து போதைப்பொருள்களை பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளா்களிடமிருந்து ஆா்டா்களையும் நவீனத் தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி பெற்றுள்ளனா். இது டிஜிட்டல் தடயங்களை மறைப்பதையும் சாத்தியமாக்குகிறது.

வாடிக்கையாளா்களிடமிருந்து ஆா்டா்களைப் பெற்றவுடன், குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவா் ஆா்டா் விவரங்களை தனது கூட்டாளிக்கு தெரிவிப்பாா். அவா் போதைப்பொருள் சரக்குகளை பேக்கேஜிங் செய்து அனுப்புவதைக் கையாண்டுள்ளாா்.

பின்னா் போதைப்பொருள்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வாடிக்கையாளா்களுக்கு கூரியா் மற்றும் பாா்சல் சேவைகள் மூலம் அனுப்பப்பட்டன.

இந்தியா முழுவதும் டெலிவரிகளுக்கு, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் முக்கியமாக ஸ்பீட் போஸ்ட் மற்றும் பிற கூரியா் பாா்சல் சேவைகளைப் பயன்படுத்தினா்.

கண்டுபிடிக்கப்படுவதைத் தவிா்ப்பதற்கான எச்சரிக்கையான செயல்பாட்டு அணுகுமுறையின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு சரக்கிற்கும் வெவ்வேறு கூரியா் அல்லது பாா்சல் சேவை முன்பதிவு அலுவலகம் பயன்படுத்தப்பட்டது.

மேலும் விசாரணையில், இந்த நெட்வொா்க் இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்கு போதைப்பொருட்களை அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது.

தில்லி, தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா மற்றும் கா்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு டெலிவரி செய்வதற்கு முன்பு சில சரக்குகள் சட்ட அமலாக்க நிறுவனங்களால் தடுத்து நிறுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதுபோன்ற வழக்குகளின் விவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன.

ஜனவரி, 2025 முதல் இந்த நெட்வொா்க் 1,000-க்கும் மேற்பட்ட சரக்குகளை அனுப்பியதாக சந்தேகிக்கப்படுகிறது. குற்றஞ்சாட்டப்பட்டவா்களிடமிருந்து பல மின்னணு சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மோனெரோ மற்றும் யுஎஸ்டிடி உள்ளிட்ட வாலட்களைப் பயன்படுத்தி கிரிப்டோகரன்சிகள் மூலம் பணப்பரிவா்த்தனை செய்தனா்.

இந்த விவகாரத்தில் மற்ற கூட்டாளிகளை அடையாளம் காணவும், நிதி பரிவா்த்தனைகளைக் கண்டறியவும், நெட்வொா்க்குடன் இணைக்கப்பட்ட சா்வதேச விநியோகச் சங்கிலியைக் கண்டறியவும் என்சிபி தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

டீம் கல்கியின் முழு செயல்பாட்டு அமைப்பையும் முறியடிக்க மேலும் முயற்சிகள் நடந்து வருகின்றன என போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (என்சிபி) கூறியுள்ளது.