சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

தொழிற்பயிற்சி நிலையங்களில் ஜூலை 1 முதல் மாணவர் சேர்க்கை

ஐடிஐ-களில் ஜூலை 15-ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை

News image

நாமக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம்

Updated On :29 ஜூன் 2024, 7:15 pm IST

தமிழ்நாட்டில் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஜூலை 1 முதல் மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது.

இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2024 - 2025-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை, ஜூலை 1 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் ஜூலை 1 முதல் நடைபெற உள்ளது.

தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு மாணவர்கள் தங்கள் அசல் கல்விச் சான்றிதழ்களுடன் நேரடியாகச் சென்று விருப்பமான தொழிற்பிரிவை தெரிவு செய்து சேர்ந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கடந்த காலங்களில் பயிற்சி பெற்றவர்காளில் 80 சதவிகிதம் பேர், பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும், இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்சாலைகளுக்கு தேவையான பல நவீன தொழிற்பிரிவுகளில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் கூடுதல் தகவல் மற்றும் சந்தேககங்களுக்கு, 94990 55689 என்ற வாட்ஸ் அப் மற்றும் அலைபேசி எண்ணில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.