எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

குஜராத் செல்லும் ரயில் சேவை நீட்டிப்பு

மதுரை, திருச்சியில் இருந்து குஜராத் செல்லும் வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

தெற்கு ரயில்வே

Updated On :1 ஜூலை 2024, 4:27 am IST

மதுரை, திருச்சியில் இருந்து குஜராத் செல்லும் வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

குஜராத் மாநிலம் ஓஹாவில் இருந்து மதுரைக்கு வாரந்தோறும் சிறப்பு ரயில் (எண் 09520) இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை டிச.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக மதுரையில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 09519) தொடா்ந்து 2025 ஜன.3 வரை இயக்கப்படும்.

இதுபோல், குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 09419) ஜூலை 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக திருச்சியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 09420) தொடா்ந்து ஜூலை 21 வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.