மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தஞ்சையில் வைக்கோல் கட்டுக்கு தீ வைத்தவர்களை தேர்வு எழுதவைத்து பிடித்த ருசிகரம்!

தஞ்சையில் வைக்கோல் கட்டுக்கு தீ வைத்தவர்களை தேர்வு எழுதவைத்து காவல்துறையினர் கைது செய்த ருசிகரம் சம்பவம் நடந்துள்ளது.

News image
தனியாா் வயலில் செவ்வாய்க்கிழமை தீ பிடித்து எரிந்த வைக்கோல்.
Updated On :1 மார்ச் 2024, 2:49 am

DIN

தஞ்சையில் வைக்கோல் கட்டுக்கு தீ வைத்த சம்பவத்தில், சந்தேக நபர்களை தேர்வு எழுத வைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் பிடித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், பந்தநல்லூர் அருகே நெய்குன்னம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருக்கு சொந்தமான வைக்கோல் கட்டுகளுக்கு கடந்த 16ம் தேதி மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்தனர்.

மேலும் அவரது வீட்டின் சுவரில் 'தெடரும்' என பிழையாகவும், அதனை திருத்தி கீழே தொடரும் என மாற்றி எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக கலியமூர்த்தி பந்தநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் அப்பகுதியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை பிடித்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் நூதன முறையை கையாண்டார். குற்றவாளிகள் சுவற்றில் தொடரும் என்பதற்கு பதிலாக தெடரும் என எழுதியதை வைத்து, பிடிப்பட்ட இளைஞர்களுக்கு, தொடரும் என முடியும் வாக்கியங்களாக கேள்விகளை தயார் செய்து அவர்களை தேர்வு எழுத வைத்துள்ளார்.

அதில், சுவரில் எழுதப்பட்டிருந்ததைப் போன்று தெடரும் என பிழையாக எழுதிய ஜெயபிரகாஷ் என்ற நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர்தான் வைக்கோல் கட்டுகளுக்கு தீ வைத்திருப்பது தெரியவந்தது. அதற்கான காரணம் குறித்து தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தன்னுடைய விளம்பரத்திற்காகவும், தங்களை பற்றி ஊர் பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்பதற்காகவும் வைக்கோல் கட்டுகளுக்கு தீ வைத்து இவ்வாறு எழுதி வைத்துவிட்டு சென்றதாக கூறியுள்ளார்.

இதையடுத்து ஜெயபிரகாஷ் மற்றும் அவருக்கு உடைந்தையாக இருந்து அவருடைய நண்பர் பிரகாஷ் ஆகிய இருவரை கைது செய்து திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.