பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தஞ்சையில் மார்ச் 4-ல் தவெக தலைவர் விஜய் பிரசாரம்!

தவெக தலைவர் விஜய் தஞ்சையில் மார்ச் 4-ல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

News image

தவெக தலைவர் விஜய் - File photo

Updated On :28 பிப்ரவரி 2026, 6:49 am

தஞ்சாவூர் : மார்ச் 4-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் அருகே செங்கிப்பட்டியில் நிர்வாகிகளையும் - தொண்டர்களையும் தவெக தலைவர் விஜய் சந்திக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அண்மையில் சேலம் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். இதில் அடுத்த கட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக வருகிற நான்காம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் பிரசாரக் கூட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலை 10 மணி முதல் 3 மணி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 4,900 நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்க உள்ளதாகவும் எனவே இந்த கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு குறித்து விசாரணை நடத்தி இன்று மாலை தகவல் சொல்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளதாக தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Summary

Thaweka leader Vijay will campaign in Thanjavur on March 4.

இதையும் படிக்க..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.