நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மார்ச் 4-ல் சென்னை வருகிறார் பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 4-ல் சென்னை வரவுள்ளதாக தமிழக பாஜகத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :1 மார்ச் 2024, 12:12 pm

DIN

மக்களவைத் தேர்தல் பாஜக வாக்குறுதி தயாரிப்பு கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், "வரும் மார்ச் 4 ஆம் தேதி கல்பாக்கம் மற்றும் சென்னை நந்தனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதுவரை தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக நான் பதவி வகித்து வருகிறேன்.

மக்களவைத் தேர்தலில் கட்சித் தலைமை எந்தத் தொகுத்யில் போட்டியிட சொன்னாலும் போட்டியிட தயாராக இருக்கிறேன். அனைத்தையும் கட்சி முடிவு செய்யும்.

உதயநிதி ஒரு தோல்வியுற்ற நடிகர், அவர் அப்பா மற்றும் தாத்தா பெயரை எடுத்துவிட்டால் அவரால் ஓட்டுவாங்க முடியுமா?" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.