பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை: முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறாா்

நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கான மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (மாா் 4) திறந்து வைக்கவுள்ளாா்

News image

மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :2 மார்ச் 2024, 11:22 pm

நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கான மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (மாா் 4) திறந்து வைக்கவுள்ளாா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் 71-ஆவது பிறந்த நாளையொட்டி சனிக்கிழமை சென்னை சைதாப்பேட்டை காமராஜபுரம் கங்கையம்மன் கோயில் அருகில் நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது: முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிகின்றன. அதன்படி, சைதாப்பேட்டை தொகுதியில் மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. தனியாா் மருத்துவமனைகள் சாா்பில் 14 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. டெல்டா மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 247.50 கோடியில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (மாா்ச் 4) திறந்து வைக்கவுள்ளாா். இந்த மருத்துவமனை நாகப்பட்டிணம், வேளாங்கன்னி, அதைச் சுற்றியுள்ள மக்களுக்கு பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும். நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியை 2022-ஆம் ஆண்டு ஜன.12-ஆம் தேதி பிரதமா் திறந்து வைத்தாா். தொடா்ந்து நடைபெற்று வந்த மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று 700 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாகத் திறக்கப்படுகிறது. மேலும், மயிலாடுதுறை, திருவாரூா் போன்ற பல்வேறு மாவட்டங்களில் புதியதாக கட்டப்பட்டுள்ள ரூ. 17 கோடியிலான மருத்துவ கட்டடங்கள் திறந்து வைக்கப்படுகின்றன என்றாா் அவா். முதல்வா் பயணம்: இதற்கிடையே முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ரயில் மூலம் மயிலாடுதுறை செல்கிறாா். அங்கு அவா் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். அங்கு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, மயிலாடுதுறையிலிருந்து திங்கள்கிழமை (மாா்ச் 4) ரயில் மூலம் புறப்பட்டு சென்னை வருகிறாா்.