பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ரயிலில் மயிலாடுதுறை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின் மயிலாடுதுறை பயணம் - புதிய மாவட்ட அலுவலகம் திறப்புக்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்

News image
Updated On :3 மார்ச் 2024, 11:28 am

DIN

முதல்வர் ஸ்டாலின் சென்னை எழும்பூரிலிருந்து, திருச்செந்தூர் விரைவு ரயிலில் மயிலாடுதுறை இன்று புறப்பட்டார்.

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உதயமான மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தை 114.48 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்காக கடந்த 2022ஆம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தரைதளம் மற்றும் 7 அடிக்குமாடி தளங்கள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. இதன் மொத்த பரப்பளவு 2,80,018 சதுர அடி. மொத்தமுள்ள 21.17 ஏக்கா் பரப்பளவில் 15.24 ஏக்கரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை எழும்பூரிலிருந்து விரைவு ரயிலில் மயிலாடுதுறை இன்று புறப்பட்டார்.

ரயில் நிலையத்தில் திமுக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு, முதல்வரை வழியனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.