சென்னை அருகே ரயில்வே கேட் சேதம்: ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்!

சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரயில்வே கேட் சேதமடைந்ததால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்.
ரயில்கள் நிறுத்தம்
ரயில்கள் நிறுத்தம்படம்: எக்ஸ்

சென்னை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் அருகே வேன் மோதியதில் ரயில்வே கேட் புதன்கிழமை காலை சேதமடைந்தது.

இதனால், சென்னை - செங்கல்பட்டு, செங்கல்பட்டு - சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

சுமார் 2 மணிநேரத்துக்கு மேலாக ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் வேலைக்குச் செல்லும் பயணிகள், மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பல பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி அருகேவுள்ள பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து சென்று பேருந்திலும், ஆட்டோக்களிலும் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com