9 நாட்களாக மறியல் போராட்டங்களை நடத்தி வந்த இடைநிலை ஆசிரியர்களுடன் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராபர்ட், பொதுத்தேர்வு நடைபெற்றுவரும் நிலையில் மாணவர் நலன் கருதி போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்படுவதாக தெரிவித்தார். மேலும், தங்களின் கோரிக்கை முதல்வர் கவனத்துக்கு செல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.