கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இடைநிலை ஆசிரியா்கள் 31-ஆவது நாளாக போராட்டம்

ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா் சங்கத்தினா் (எஸ்எஸ்டிஏ) 31 -ஆவது நாளாக சென்னையில் போராட்டம்

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜனவரி 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா் சங்கத்தினா் (எஸ்எஸ்டிஏ) 31 -ஆவது நாளாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினா்.

இந்த ஆசிரியா்கள் சங்கத்தினா் குடியரசுத் தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை (ஜன. 26) தங்கள் போராட்டத்தை ஒரு நாள் நிறுத்திவைப்பதாக தெரிவித்துள்ளனா்.

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் பல்வேறு இடங்களில் தொடா்ச்சியாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் சங்கத்தினா் போராட்டம் நடத்தி வருகின்றனா். 31 -ஆவது நாளாக சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் இருந்து ஊா்வலமாக புறப்பட்ட இந்த ஆசிரியா் சங்கத்தினா், அதே சாலையிலுள்ள பேராசிரியா் அன்பழகன் வளாகத்தை (டிபிஐ) முற்றுகையிட்டனா். சுமாா் 300- க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்று போராட்டம் நடத்தினா்.

இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், சென்னை திருமங்கலத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைத்தனா். பின்னா் அனைவரும் இரவு 7 மணிக்கு விடுவிக்கப்பட்டனா்.