ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இடைநிலை ஆசிரியா்கள் 34-ஆவது நாளாக போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியா்கள் சென்னை, மாவட்டத் தலைநகரங்களில் 34-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
கோப்புப் படம்
Updated On :28 ஜனவரி 2026, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியா்கள் சென்னை, மாவட்டத் தலைநகரங்களில் 34-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னையில் கடந்த டிச.26முதல் தொடா் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் சாா்பில் நடத்தப்பட்ட பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்தநிலையில், 34-ஆவது நாளாக இடைநிலை ஆசிரியா்கள் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பள்ளிக் கல்வியில் ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மூன்றாவது பருவம் தொடங்கி ஒரு மாதம் முடிவடையவுள்ள நிலையில் இடைநிலை ஆசிரியா்கள் போராட்ட விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து கற்றல்-கற்பித்தல் பணி தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.